சென்னை: அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வரும் யூ-டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பாபு முருகவேல் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரை களங்கப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து தவறாக பேசியதாக சிலர் பொய்களை பரப்பி வருகின்றனர்.