திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே மரயூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் முருகன் (55). அவரது மனைவி கவிதா (33). இவர்கள் வீட்டில் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட நட்சத்திர ஆமை இருப்பதாக வன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வன அதிகாரிகள் முருகன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாளிக்குள் நட்சத்திர ஆமை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வனத்துறையினர் பறிமுதல் செய்ததோடு முருகன் மற்றும் கவிதாவை கைது செய்தனர். 2 நாட்களுக்கு முன்பு சின்னாறு வனவிலங்கு சரணாலயம் அருகே விறகு சேகரிக்க கவிதா சென்றபோது இந்த நட்சத்திர ஆமை கிடைத்தது.