தமிழகத்தில் உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளால் உயிரிழந்த 50 காவலர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

சென்னை: தமிழகத்தில் உடல் நலக்குறைவு மற்றும் விபத்து காரணமாக உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். எனவே உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என கூறினார்.

பொதுமுடக்கம் தொடங்கியதில் இருந்து எதிர்பாராத பல விபத்துகளும் உயிரிழப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது. சாலை விபத்துகள், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு, பாம்பு கடி என பல காரணங்களால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவித்து வருகிறார். அதே போல, கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு அரணாக இருந்த முன்களப்பணியாளர்கள் உயிரிழந்தாலும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

Related Stories: