சென்னை: நாளை மறுநாள் சசிகலா தமிழகம் வரவுள்ள நிலையில் ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ் இன்று மாலை ஆலோசனை நடத்தகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஆலோசனை கூட்டத்திற்கு அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.