சைதாப்பேட்டையில் புதிய தகவல் ஆணைய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சைதாப்பேட்டையில்  தரை மற்றும் 5 தளங்களுடன், ரூ.27 கோடியே 79 லட்சம்  மதிப்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு தகவல் ஆணைய கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடத்தில், மேல்முறையீட்டு விசாரணை அறைகள், ஆணையர்களுக்கான அலுவலக அறைகள், அலுவலர்களுக்கான அறைகள், அலுவலக அறைகள், மேல்முறையீட்டு மனுதாரர்களுக்கான காத்திருக்கும் அறைகள், நூல கம், கூட்ட அரங்கு, வாகன நிறுத்துமிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள்  உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

Related Stories: