நாடு முழுவதும் மின்ஊழியர்கள் போராட்டம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று மின்ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார சட்டத் திருத்த மசோதாவைக் கைவிடுவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பல பிரிவு அலுவலகங்களிலும் போராட்டம் நடந்தது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. மின் கட்டண வசூல் மையத்தை அடைத்து விட்டு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: