பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய தாசில்தார் உட்பட 2 பேர் கைது

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நகர நிலவரி திட்ட தனி தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சத்தியமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சனாவுல்லா என்பவர் தனது வீட்டிற்கு பட்டா பெயர் மாறுதல் செய்வதற்காக அதிகாரிகளை அணுகினார். அப்போது லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி அந்த அலுவலகத்துக்கு சென்று பட்டா மாறுதல் செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அதை பெற்ற தனி தாசில்தார் வேல்முருகன், முதுநிலை உதவியாளர் பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: