சென்னை: தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை தடுக்க அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு பிரிவை துவக்க வேண்டும் என ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பரிவில் காவல் எஸ்.பி., சமூக நலத்துறை, ஆதிதிராவிட அதிகாரி இருக்க வேண்டும் என கூறியிருந்தது.