திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் ஒன்றியம், நகரம், மாவட்ட, மாநில பொறுப்புகள் எல்லாம் புதிதாக மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாரி வழங்கி அசத்தி உள்ளது அதிமுக தலைமை. தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இல்லையாம். ஒட்டுமொத்தமாக மூத்த நிர்வாகிகள் ஓரம் கட்டி வைக்கப்பட்டுள்ளார்களாம். அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களிலும், மூத்த நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெறுவதில்லை. நிகழ்ச்சிகளுக்கு அழைப்பும் விடுக்கப்படுவதில்லையாம். வரும் தேர்தலில் அதிமுகவில் போட்டியிட மூத்த நிர்வாகிகள் சீட் கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, அனைவரையும் ஓரம் கட்டி புதிய நிர்வாகிகள் செயல்படுகிறார்களாம்.