புதியவர்களுக்கு சீட் எங்களுக்கே அல்வாவா... கொதிக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் ஒன்றியம், நகரம், மாவட்ட, மாநில பொறுப்புகள் எல்லாம் புதிதாக மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாரி வழங்கி அசத்தி உள்ளது அதிமுக தலைமை. தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இல்லையாம். ஒட்டுமொத்தமாக மூத்த நிர்வாகிகள் ஓரம் கட்டி வைக்கப்பட்டுள்ளார்களாம். அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களிலும், மூத்த நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெறுவதில்லை. நிகழ்ச்சிகளுக்கு அழைப்பும் விடுக்கப்படுவதில்லையாம். வரும் தேர்தலில் அதிமுகவில் போட்டியிட மூத்த நிர்வாகிகள் சீட் கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, அனைவரையும் ஓரம் கட்டி புதிய நிர்வாகிகள் செயல்படுகிறார்களாம்.

பல வருடங்களாக கட்சிக்காக பாடுபட்டு படிப்படியாக வளர்ந்து வந்தவர்களின் பதவிகளை பறித்ததோடு மட்டுமல்லாமல், மரியாதை கொடுக்காமல் ஓரம் கட்டியதால் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் அதிமுகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ள மூத்த நிர்வாகிகள், வரும் தேர்தலில் சீட் கொடுக்காவிட்டால் மாற்றுக்கட்சிக்கு தாவுவதற்கும் முடிவு செய்துள்ளார்களாம். அதேபோல் பதவிகளை மட்டும் கொடுத்துவிட்டு, தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காமல் இருந்தால் கட்சியையும், பதவியையும் தூக்கி போடுவதற்கும் புதிய நிர்வாகிகள் தயாராகிவிட்டார்களாம்.

Related Stories: