மஞ்சூர்: மஞ்சூர் அருகே மேய்ச்சலில் இருந்த பசு மாட்டை சிறுத்தை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டக்கண்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், கடந்த சில மாதமாக சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. நேற்று முன்தினம் இப்பகுதியை சேர்ந்த விவசாயி சதீஷ் என்பவரின் பசு மாடு குடியிருப்பை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் ேமய்ந்து கொண்டிருந்தது. அப்போது, தேயிலை செடிகளுக்கிடையே மறைந்திருந்த சிறுத்தை திடீரென பசுவின் மீது பாய்ந்து தாக்கியது. இதில், பசு மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பின்னர், பசுவை பாதியை சாப்பிட்டு விட்டு மீதியை செடிகளுக்கு இடையே விட்டுச்சென்றது. சிறிது நேரத்தில் தேயிலை பறிக்க சென்ற தொழிலாளர்கள் பசுவின் உடலை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.