சென்னையில் 28ம் தேதி வரை பொதுக்கூட்டம் நடத்த தடை

சென்னை: கொரோனா பரவலை  தடுக்கும் வகையில் வரும் 28ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முன் அனுமதியின்றி பொது இடங்களில் கூட்டங்கள் நடத்தவோ, 5 பேருக்கு மேல் ஒன்று  கூடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைமீறி பொது இடங்களில் கூட்டம் நடத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது 144 சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் வரும் 28ம் தேதி வரை  நடைமுறையில் இருக்கும் என்று மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories: