மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக்க போராடி வருகிறது.
ஆனால், மேற்கு வங்கத்தில் கால் பதித்து மக்களவைத் தேர்தலில் 18 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கி காய்களை நகர்த்தி வருகிறது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜ.வில் ஒவ்வொருவராக ஐக்கியமாகி வருகிறார்கள்.