சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு, அமமுக சார்பில், பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிப்ரவரி 3ம் தேதி காலை 8 மணிக்கு மதுரை, நெல்பேட்டை ஏ.வி.மேம்பாலம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில், தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டம், ஊராட்சி, கிளை செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், கலந்து கொள்ள வேண்டும்.