சென்னை: தனியார் சுயநிதி கல்லூரிகளில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக மருத்துவ கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தனியார் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாகப் பிரிவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான பல எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. அதன் காரணமாக 2020 நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள், தனியார் கல்லூரிகளில் நிர்வாகப் பிரிவில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.