சென்னை: ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முழுமையான, முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரயில்களை விரைவில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பேருந்துகள், பயணிகள் ரயில்கள், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதைப்போன்று 500க்கும் மேற்ப்பட்ட மின்சார ரயில்களும் 80க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. எனினும் வழக்கமான எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரயில்களின் சேவை இன்னும் தொடங்கவில்லை. இதனால் அவசரத்துக்கு ரயிலில் செல்லும் பயணிகள் மற்றும் மாதாந்திர பாஸ் வைத்துள்ள பயணிகள் ரயில்களை பயன்படுத்த முடியவில்லை.