சென்னை: கடந்த வருடம் சசிகலா மற்றும் உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் வருமானத்துறை சோதனை நடத்தியது. பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன பல சொத்துக்கள் பினாமி தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது. இந்த நிலையில் சிறையில் இருந்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.