கோவை: பால் தினகரன் குழுமத்தில் வருமான வரித்துறையினர் 3 நாட்களாக நடத்திய சோதனையில் 5 கிலோ தங்க கட்டிகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை கடந்த 20ம் தேதி முதல் 3 நாட்களாக சோதனை நடத்தினர். கோவையில் அவருக்கு சொந்தமான காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல், காருண்யா பல்கலைகழகம், ஜெபக்கூடம், இயேசு அழைக்கிறார் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் 5 கிலோ தங்க கட்டிகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. வருமான வரித்துறையினர் அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.