பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரபாகரன். மனைவி இந்திராணி (45). இவர், வியாசர்பாடி 49வது பிளாக்கில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்றிரவு ரவுடி ஆராய்ச்சி (எ) சதீஷ் (32) என்பவர் வந்துள்ளார். கடையில் இருந்த இந்திராணியை மிரட்டி மாமூல் கேட்டுள்ளார். தர மறுத்ததால் கடையில் இருந்த பாட்டில்களை உடைத்து, இந்திராணியை தகாத வார்த்தைகளால் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.