ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மினி லாரி மீது உரசி சென்ற பைக், தனியார் பஸ் மோதியதில் நண்பர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை நந்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கந்தன் (18). பிளஸ் 2 படித்துள்ளார். அதே பகுதி மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பார்த்திபன் (18). பிளஸ் 1 படித்துள்ளார். சீனிவாசன் என்பவரது பாலாஜி (16). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நேற்று மாலை நண்பர்கள் 3 பேரும், வல்லக்கோட்டையில் இருந்து ஒரகடம் நோக்கி பைக்கில் புறப்பட்டனர். பெரும்புதூர் - சிங்கபெருமாள் கோயில் சாலை மாத்தூர் அருகே சென்றபோது, முன்னால் மினிலாரி மற்றும் பஸ் சென்று கொண்டிருந்தது. அதன் இடையே முந்தி செல்ல முயன்றனர்.