சென்னை: மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் இ.சி.ஆர் சாலை அருகே உள்ள பாபா ஸ்டோன்ஸ் சிற்பக்கலை கூடம் உள்ளது. இங்கு, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜீவ்தானி தேவி சான்ஸ்தன் கோயிலில் உள்ள கருவறையில் பிரதிர்ஷ்டை செய்வதற்காக 10 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் விநாயகர் சிலை செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் 10 அடி உயரத்தில் மூசிக வாகனம் தாங்கிய ஆதார பீடத்துடன், அமர்ந்த கோலத்தில் 5 அடி அகலத்தில் 4 கரங்களில் லட்டு, அபயம் தாங்கிய திருக்கோலத்தில் அமர்ந்த நிலையில், சைவ ஆகம முறைப்படி விநாயகர் சிலையை பாபா ஸ்டோன்ஸ் உரிமையாளர் சிற்பி பாலன் அறிவுமணி தலைமையில் 20க்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த மூன்று மாதமாக வடிவமைத்து வந்தனர்.