சென்னை: சென்னை கே.கே.நகர் அடுத்த எம்.ஜி.ஆர்.நகர், நக்கீரன் தெருவை சேர்ந்தவர் பிரின்ஸ் (40). அங்குள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர், கூடுவாஞ்சேரி அடுத்த பெரிய அருங்கால் கிராமத்தை சேர்ந்த மோசஸ். நேற்று முன்தினம் மோசஸ் பிறந்தநாள் என்பதால், அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பிரின்ஸ் உள்பட நண்பர்கள் கலந்துகொண்டு, கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர், நண்பர்கள் அனைவரும் மது அருந்தினர். பின்னர், மோசஸ் வீட்டின் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் 20க்கும் மேற்பட்டோர், போதையில் குதித்து விளையாடினர்.