சென்னை: சட்டமன்ற தேர்தல் வருவதை அடுத்து ராகுல் காந்தி 3 நாட்கள் தமிழகத்தில் மெகா ரோடு ஷோவில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.