சென்னை: மணலி உரத் தொழிற்சாலையில் வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வர தமிழக ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மணலி எம்எப்எல் மத்திய அரசுக்கு சொந்தமான தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் உரம், இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்த உர மூட்டைகளை கையாள 265 ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தினக்கூலி உயர்த்தவில்லை. பண்டிகை கால சலுகை போன்ற எந்த பயனும் அளிக்கவில்லை. இதுகுறித்து ஒப்பந்த ஊழியர்களின் தொழிற்சங்கத்தினர் ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்எப்எல் தொழிற்சாலைக்கு புதியதாக வட இந்திய கூலித்தொழிலாளர்களை கொண்டுவர ஒப்பந்ததாரர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த ஒப்பந்ததாரர்கள் வட இந்திய தொழிலாளர்களை நியமிக்க கூடாது. இந்த செயல் தங்களுடைய வேலை வாய்ப்பு பறிக்கக் கூடியது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.