ஆவடி: பெற்றோர் பைக் வாங்கித் தராததால் வாலிபர் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடி அருகே கோயில்பதாகை கலைஞர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் பாதுகாப்புத்துறை ஊழியர். இவரின் மகன் பரத்குமார் (22). இவர் பிகாம் முடித்துள்ளார். இந்த நிலையில், தனக்கு பைக் வாங்கித்தரவேண்டும் என்றுதந்தையிடம் தொடர்ந்து கேட்டுள்ளார். அதற்கு தங்கராஜ், ‘’தற்போது பணம் இல்லை. கொஞ்சநாள் கழித்து வாங்கி தருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் பரத்குமார், விடாப் பிடியாக பைக் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்றிரவு சாப்பிடாமல் தனது படுக்கை அறைக்கு பரத்குமார் சென்று விட்டார்.