சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் மாத தொடக்கத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மே, ஜூன் மாதங்களில் சி.பி.எஸ்.சி. பள்ளி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.