காரைக்குடி: காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க 112 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் ஆமை வேகத்தில் 4 ஆண்டுகளுக்கு மேல் நடக்கிறது. பணிகள் முடிந்த சில பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலை இல்லாததால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். முக்கிய சாலையான செக் காலை, செஞ்சை சாலை, வவு சி சாலை என அனைத்து சாலைகளும் பயன்படுத்த முடியாமல் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளம் படுகுழிகளாக உள்ளது. இதனை கண்டித்து தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர், மாநில இலக்கிய அணி செயலாளர் தென்னவன் தலைமையில் சாலையில் படுத்து உருளும் போராட்டம் நடந்தது.