சென்னை: நடிகர் விஜய்யின் மாஸ்டர் படக்காட்சிகள் லீக்கானது தொடர்பாக ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஜனவரி 13-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் முன்பே காட்சிகள் லீக் ஆனதால் தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஊழியர் மூலம் படக்காட்சி லீக்கானதால் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையின் பொது திரையரங்குகளில் வெளியானது. எனவே 50% இருக்கைகளுடன் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் அறிவித்திருந்தது. மேலும் மாஸ்டர் படத்தை இணையத்தளத்தில் வெளியிட அனுமதியில்லை எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகும் முன்பே காட்சிகள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.