கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள டயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நடந்தது. இதில் ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான டயர் கம்பெனி உள்ளது. இங்கு கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் டயர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து புகை மண்டலமாக மாறியது. இதனால் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.