சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளருமான எம்.வேலுத்தேவர் மறைவிற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளருமான எம்.வேலுத்தேவர் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.