சென்னை : சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நகர்புற சமுதாய சுகாதார நல மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திடடத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துறை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாநகர நல அலுவலர் ஜெகதசீன், மாநகர மருத்துவ அலுவலர் ேஹமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் 10 முதல் 15 ஆயிரம் பேர் கூடுதலாக பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் மருத்துவர்களுக்கும் அனைத்து விதமான சுகாதாரப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட உள்ளது.