செங்கல்பட்டு: மறைமலைநகரில், திருவள்ளுவர் மன்றம் சார்பில் திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைமலைநகர் நகர திருவள்ளுவர் மன்றம் சார்பில், திருவள்ளுவர் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. திருவள்ளுவர் மன்ற நிர்வாகி குமரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சமத்துவமணி, டிக்காரம், அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, திருவள்ளுவர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கினார். விழாவில், பள்ளி மாணவி சகானா சிலம்பம் விளையாட்டை ஆடினார்.