சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்பானவராக, பழகுவதற்கு இனிமையானவராக ஞானதேசிகன் திகழ்ந்தார். மேலும் கட்சி வேறுபாடின்றி சிறந்த பண்பாளராகவும், நண்பராகவும் திகழ்ந்த ஞானதேசிகனின் மறைவு பேரிழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.