மதுரை: தமிழக மக்களுக்கு வணக்கம், ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழச்சியளிக்கிறது என மதுரை அவனியாபுரத்தில் ராகுல்காந்தி எம்.பி பேசினார். தமிழ் கலாசாரம், பாரம்பரியம் இந்தியாவிற்கு இன்றியமையாதது எனவும், அது மதிக்கப்பட வேண்டும் என ராகுலங் காந்தி கூறினார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த ராகுல் காந்தி மேடையில் பேசினார். தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்க வேண்டியது என கடமை என கூறினார். உங்களது உணர்ச்சிகளையும், கலாசாரத்தையும் ரசித்து பாராட்டவே வந்துள்ளேன் என தெரிவித்தார். ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த ராகுல் காந்தி சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு புறப்பட்டுச் சென்றார். ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த ராகுல்காந்தி... மெய்க்காப்பாளரை தள்ளி நிற்குமாறு அறிவுறுத்தினார்.