மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் ரூ. 1லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில்முதல் சுற்று முடிந்த நிலையில் 2-வது சுற்று தொடங்கியுள்ளது. முதல் சுற்று முடிவில் 68 காளைகள் வாடிவாசலில் சீறிபாய்ந்துள்ளன. இரண்டாம் சுற்று வீரர்களுக்கு மஞ்சள் நிற உடை வழங்கப்பட்டுள்ளது.