டெல்லி :வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தும் டெல்லியில் 50வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உபி, அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியில் 50நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சட்டங்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் மீது நேற்று விசாரணை நடந்தது.