புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வீடு அருகே போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசாரை கைது செய்து விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் எனக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசயாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாய சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்து நேற்று மத்திய வேளாண் துறை அமைச்சர் தோமர் வீடு அருகே போராட்டம் நடத்த முன்றனர்.