சென்னை: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்ட அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக சட்டசபையில் 110ம் விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேளச்சேரியில் வனத்துறை தலைமையக கட்டிடம் கட்டுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் அரசுக்கு முதன்மை தலைமை வன பாதுகாவலர் கடிதங்கள் எழுதியிருந்தார்.