மதுரை: மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான நாளை (ஜன. 14) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராகுல் காந்தி நாளை (வியாழன்) மதுரை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பகல் 12 மணிக்கு மதுரை வரும் அவர், அங்கிருந்து காரில் அவனியாபுரம் செல்கிறார். அவர் செல்லும் வழியெங்கும் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூன்று இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.