பிப். 8, 9ம் தேதிகளில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு நேர்காணல்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மாநில நீதித்துறை பணிக்கான உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 171 காலி பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 7, 18ம் தேதிகளில் நடந்தது. இதில் 239 பேர் கலந்து கொண்டனர்.

தேர்வில் விண்ணப்பத்தாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வு சரிபார்ப்புக்கு தற்காலிகமாக 58 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இந்த விவரம் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்காணல் தேர்வு வருகிற 8, 9ம் தேதிகளில் நடைபெறும்.

Related Stories: