மத்திய பிரதேசத்தில் கள்ளச் சாராயம் குடித்து 12 பேர் பலி

போபால்: மத்திய பிரதேச மாநிலம், மொரேனா மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 11 பேர் பலியாகினர். 7 பேர் கவலைக்கிடமான நிலையில், குவாலியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தின் மன்பூர், பாகவலி கிராமங்களில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அவர்கள் அருந்திய சாராயத்தில் விஷத்தன்மை இருந்ததா? என்பது தெரிய வரும். மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அவரது டிவிட்டரில், `இது தொடர்பாக மொரேனா காவல் நிலைய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது’, என்று கூறியுள்ளார்.

Related Stories: