மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவரை மீட்க வேண்டும்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று மத்திய அரசை ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கல்வீச்சு நடத்தி 9 மீனவர்களை அச்சுறுத்தி கைது செய்துள்ளனர். ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அதற்கு முன்பாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் சுமார் 40 பேரை மீட்கவும் படகுகளை திரும்ப பெறவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு கடலோர காவல்படையைக் கொண்டு முழு பாதுகாப்பு கொடுப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: