சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று மத்திய அரசை ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கல்வீச்சு நடத்தி 9 மீனவர்களை அச்சுறுத்தி கைது செய்துள்ளனர். ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.