சென்னை: இலங்கை மற்றும் குமரிக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்ட வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி தற்போது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. தற்போது அந்த காற்றழுத்த சுழற்சி சற்று வலுப்பெற்றுள்ளதால், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.