நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று என்னை வேதனைக்குள்ளாக்கவேண்டாம் : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

சென்னை : ரசிகர்கள் போராட்டம் நடத்தினாலும் தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நான் அரசியலுக்கு வருவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.

தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தில் இருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. நான் ஏன் எப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவுகூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: