சென்னை: அடையார் எஸ்பிஐ காலனியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் எஸ்பிஐ காலனி ஜீவரத்தினம் நகர் 1வது தெருவில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன்(32) என்பவர் 4 இளம் பெண்களை வைத்து மசாஜ் சென்டருக்கு வரும் நபர்களை மயக்கி பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. போலீசார் வேல்முருகனை கைது செய்து அவரிடம் இருந்து 4 இளம் பெண்கள் மீட்டனர்.