சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் 8வது சுற்று பேச்சுவார்த்தையிலும் விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளான சென்னை, அசோக் நகர் நல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த பெருமாள் (68), விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்று கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த 9ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்.