கடலூர்: கடலூரில் கோழியை கொன்று முட்டை, எலியை விழுங்கிய பாம்பு அதனை மீண்டும் கக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடலூர் கம்மியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். மேலும் தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வந்துள்ளார். தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக மாயாண்டி தனது வீட்டின் மாடியில் வைக்கோல் போட்டு வைத்துள்ளார். இந்த வைக்கோலில் அவர் வளர்க்கும் கோழி, முட்டை விட்டு அதனை அடைகாத்து வந்துள்ளது.
