வேதாரண்யம்: வேதாரண்யத்தில் சிலம்பம் ஆசிரியர் கடந்த பத்தாண்டுகளாக இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார்.வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளத்தில் வசிப்பவர் கோபால் (65). இவர் புயல் அன்று பிறந்ததால் புயல் கோபால் என்று இவரை மக்கள் அழைக்கின்றனர். இவர் சிறு வயதில் அப்பகுதியில் உள்ள சிலம்பம் கற்கும் இடத்திற்கு சென்று வேடிக்கை பார்த்துள்ளார். பின்பு சிலம்ப கலையை கற்று மிகுந்த தேர்ச்சி பெற்று பல்வேறு போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.சிலம்பாட்டம் என்பது தமிழரின் பாரம்பரிய தற்காப்புக்கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். பேச்சுவழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.