சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் தொடர்ந்து பெய்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல் அதிக ஈரப்பதம் கொண்டதாக இருப்பதால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியவில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். உழவர்களின் நலன் கருதி இப்போது 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.