16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வு

சென்னை: 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கிய நிலையில், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனுதாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் முடிந்த நிலையில் அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை முறைப்படி இருவரும் பதவியேற்கவுள்ளனர். 
சட்டசபை பொதுத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்றார். தமிழக சட்டசபை கூடடத்தொடர் இன்று காலை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. பின்னர் சட்டப்பேரவையில் யார் சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துவந்த நிலையில் தற்போது அப்பாவு தேர்வு செய்யப்பட்டார். 

The post 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: