சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நீர்நிலைகளை மீட்டு அறிக்கை அளிக்க நீலகிரி ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரியில் நீர்நிலையை மீட்ககோரி ரமேஷ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.